Posts

" மணிமேகலை "

உலக அறவி என்பது ஊர்ப் பொதுமன்றமாகும். பெரிய வாயில்களும், கூடங்களும், அமர்வதற்கும் உண்பதற்குமான நீண்ட பகுதிகளும் உள்ள இடம். மணிமேகலை பசிப்பிணியால் வாடும் வறியவர்களுக்கு அங்கு அன்னதானம் வழங்கப்போகிறாள் என்ற செய்தி காட்டுத்தீபோல நகரெங்கும் பரவிற்று.  அறவண அடிகள் ஏழெட்டு புத்தபிக்குகளையும் தேவையான கலன்களையும் தமது புத்தமடத்திலிருந்து அனுப்பியிருந்தார்.  ஆதிரை இட்ட உணவு வற்றாமல் சுரப்பதை மணிமேகலை ஏற்கனவே பரிசோதித்துப் பார்த்துவிட்டாள். எல்லா உணவுப்பதார்த்தங்களும் அப்போது சமைத்து இறக்கியது போன்ற சுவையும், மணமும் மாறாமல் இருந்தன.  “மணிமேகலா! வாசலில் நெறியும் கூட்டத்தைப் பார்த்தாய் அல்லவா? அவர்களுக்கு உணவு அளிக்க ஏன் இத்தனை தாமதம்?”என்று உள்ளே நுழைந்த மாதவி கேட்டாள்.  “கொஞ்ச நேரம் பொறு, அம்மா,”என்ற மணிமேகலை, சாளரத்திலிருந்து வாயிலையும் தாண்டிப் பார்வையை ஓடவிட்டாள்.  “இன்னும் வருவதற்கு யாரம்மா இருக்கிறார்கள்?”என்று கேட்ட மாதவியின் கேள்வியில் பொறுமை அதன் முதல் பிரியை இழந்திருந்தது.  “முதல் தானத்தைப் பத்தினிப்பெண்ணான ஆதிரை இட்டதைப்போல முதல் கொடையைப் பெற்றுக் கொள்ள யார...

"சிலப்பதிகாரம்"

மதுரைத் தெய்வம் மதுரை நகர் ஒரு மங்கை வடிவம் கொண்டு கண்ணகியின் பின்புறம் வந்து நின்றது. சடைமுடி தரித்திருந்தாள். சிவனைப்போல் பிறை தரித்திருந்தாள். குவளை மலர் போன்ற கண்கள்; ஒளிபடைத்த முகத்தினள், கடைவாயில் பல் வளைந்து வெளிப்பட்டுத் தோன்றியது; பவள வாயள்; முத்துப் போன்ற பற்கள்; இடப்பக்கம் கருப்பு: வலப்புறம் சிவப்புப் பொன்னிறம் பெற்றிருந்தாள். உமைபாகன் வடிவம் அவளுடையது. இடக்கையில் தாமரைமலர் வலக்கையில் கொடுவாள்; வலக்காலில் வீரக்கழல், இடக்காலில் கால்சிலம்பு, பாண்டியனின் குல முதல்வி அவள். அவள் வருத்தத்துடன் கண்ணகி முன் நிற்க அஞ்சிப் பின் தொடர்ந்தாள். “நங்கையே! என் குறை கேட்பாயாக!” என்று அம் மங்கை விளித்துப் பேசினாள். வாட்டமுற்ற நங்கை கண்ணகி வலப்பக்கமாகத் திரும்பிக் “கோட்டமுற்றுக் கேட்ட நீ யார்? ஏன் என்பின் வருகிறாய்? என் துயரம் முழுதும் நீ அறிவாயோ!” என்று கேட்டாள். “துயரம் அறிந்தே உன்னைத் தொடர்கிறேன்; மதுரைப்பெண் யான், கட்டுரை கூற வந்திருக்கிறேன். உன் கணவனுக்காக இரங்குகின்றேன் என் அரசனுக்கு வந்தது தீ விதி; அது போல் உன் கணவனுக்கும் ஒரு தீ வினை வந்தது. இருவருக்கும் கேடுகள் நேர்ந்தன; அவர்கள் செய்த...

" பெரியபுராணம் "

தமிழ்நாட்டில்  கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர்  ஆதனூர் . இவ்வூர்ச் சேரியிலே புலைப்பாடி ஒன்று இருந்தது. அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ என்றோர் நல்லவர் இருந்தார். அவர் பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவரானார். திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர். அவர் தமது குலப்பிறப்பிற்கேற்ற கொள்கையால் ‘புறத்தொண்டு’ புரிந்து வந்தவர். கோயில் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிவார் என்பன கொடுப்பார். அருச்சனைக்காக கோரோசனை கொடுப்பார். பேரன்புப் பெருக்கால் ஆடுதலும் பாடுதலும் செய்வார்.   ஒருநாள் அருகேயுள்ள திருப்புன்கூருக்குச் சென்று வழிபட விரும்பினார். விருப்பம் போன்று சென்று வாயிலினின்று இசைபாடி நின்றார். அப்பொழுது பெருமானை நேரில் கும்பிடவேண்டுமென்ற ஆசை பெருகியது. அன்பரின் ஆசை தீர்த்தற்குப் பெருமான் நந்தியை விலகுமாறு செய்து நேரே தரிசனம் அளித்தார். நேர்த் தரிசனம் பெற்றுப் பரவசத்தரான நந்தனார் பணிந்தெழுந்து வீதி வலம் வரும்போது பள்ளமான ஓரிடத்தைக் கண்டார். அவ்விடம் குளம் தோண்டுவதற்கு அமைவாயிருப்பது கண்டு குளம் அமைத்தார். பின் கோ...

"கம்பராமாயணம் வாலி வதைப் படலம் "

வாலியின் முடிவு இராமன் விளக்கம் தொடர்கிறது.  சிவன் மீது பத்தி காட்டிய தவத்தின் பயனாக நிலன், நீர், தீ, காற்று என்னும் 4 பூதங்களையும் ஒத்த ஆற்றலினைப் பெற்றுள்ளாய் 121 அருந்தவம் செய்த தவமுனிவர்களில் சிலர் தவப்பயனுக்கு ஏற்ப வேறு உருவம் கொண்டுள்ளனர் 122 எக்குலத்தவரும் அவரவர் செயலின் தன்மையால் மேன்மையும், கீழ்மையும் பெற்றுள்ளனர்.  இது மனுநீதி என்றான் இராமன் 123 'மறைந்து நின்று எய்வது முறையோ?' என வாலி வினவ, இலக்குவன் விடை பகர்தல் அவ்வாறே அகுக.  செவ்வியனாகிய நீ, வேடன் விலங்குகளை மறைந்திருந்து அம்பு எய்வது போல, நீ மறைந்திருந்து என்மேல் அம்பு எய்த்து செவ்வியது ஆகுமா - என வாலி வினவினான் 124 அதற்கு இலக்குவன் விடை தருகிறான்  உன்னிடம் சரண் புகுந்த உன் தம்பியை நீ தென்புலம் அனுப்புவேன் என்று தாக்கினாய்.  உன் தம்பி உயிருக்கு இராமன் அடைக்கலம் தந்தான்.  அதனால் மறைந்திருந்து இராமன் கொன்றான் - என்றான் இலக்குவன் 125 [இது ஏமாற்று விடை] இராமன் அறத்திறம் அழிய எதும் செய்யமாட்டான் என்ற முடிவுக்கு வந்தான். இராமனை வணங்கினான் 126 நாயேன் தீமைகளைப் பொறுத்தருள வேண்டும் - என்று இராமனை வேண்...

"கம்பராமாயணம்- வாலி வதைப் படலம் "

வாலி, இராமன் உரையாடல் இராமன் சொன்னவை தக்கவை அல்ல என்று வாலி கூறுகிறான் 111 ஐய! உங்கள் குல மகளிர்க்கு அமைந்த கற்புப் புணர்ச்சி போல் பிரமன் எங்களுக்கு நெறியினைப் படைக்கவில்லை 112 எங்களுக்குத் திருமணம் என்னும் ஒழுக்க நெறி இல்லை. களவு வழி வந்த கற்பும் இல்லை.  உணர்ச்சி வழியில் வருவதுதான் எங்கள் ஒழுக்கம் 113 எங்கள் நெறி வழி நான் குற்றமற்றவன்  நீ அதனைக் குற்றம் என்று கருதுகிறாய் - என்றான் வாலி 114 தேவர்க்கு (இந்திரனுக்கு) பிறந்தவன் நீ.  அறநெறி கண்டவன் நீ.  நீ விலங்கு அல்லை 115 அறத்தாறு என்பது பொறி உணர்வில் இருக்கிறதா  புலன் அறிவில் இருக்கிறதா  நீ புலனறிவு உடையவன் 116 பெருமை மிக்க உணர்வுப் பயனால் வீடு-நெறி கண்ட நீ விலங்கு அன்று 117 சிந்தை அறத்தின் வழியில் சென்றதால், எந்தை கழுகரசன் சடாயு, விலங்கு அன்று 118 நன்று, தீது அறியாமல் வாழ்வது அன்றோ விலங்கு.  நீ நன்னெறி அறிந்தவன் ஆயிற்றே 119 தக்கவை இவை, தகாதவை இவை என்று பகுத்துணரா விட்டால் மக்களும் விலங்கே.  விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் (கல்லாமை குறள் எண்:410) உணர்ந்து நடந்துகொண்டால் அவர...

"கம்பராமாயணம் - வாலி வதைப் படலம் "

வாலி போருக்கு எழுதல் சுக்கிரீவன் உரத்த குரலில் வாலியைப் போருக்கு அழைத்தான் 11 அந்தக் குரல் வாலியின் காதுகளைத் துளைத்தது 12 அப்போது வாலி பாற்கடல் போன்ற படுக்கையில் இருந்தான் 13 தம்பி நிலையை எண்ணி வாலி சிரித்தான் 14 வாலி எழுந்த விசையில் அவன் மலையே அழுந்திற்று 15 அவன் விட்ட மூச்சு தேவருலகிலும் புகைந்தது 16 இடி போல் கைகளைக் கொட்டினான் 17 வந்துவிட்டேன், வந்துவிட்டேன் - என்றான் 18 அவன் விசையில் எழுந்த காற்று மரங்களை வேருடன் சாய்த்தது 19 வாலி தன் பல்லைக் கடித்தான்  அதன் ஒலியில் இடிகள் விழுந்தன 20 பாடல் வார்த்தை அன்னது ஆக, வான் இயங்கு தேரினான் மகன், நீர்த் தரங்க வேலை அஞ்ச, நீல மேகம் நாணவே, வேர்த்து மண் உளோர் இரிந்து, விண் உளோர்கள் விம்ம, மேல் ஆர்த்த ஓசை, ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே. 11 இடித்து, உரப்பி, 'வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென்' என்று, அடித்தலங்கள் கொட்டி, வாய் மடித்து, அடுத்து அலங்கு தோள் புடைத்து நின்று, உளைத்த பூசல் புக்கது என்ப - மிக்கு இடம் துடிப்ப, அங்கு, உறங்கு வாலி திண் செவித் துளைக்கணே. 12 மால் பெருங் கட கரி முழக்கம் வாள் அரி ஏற்பது செவித்தலத்து என்ன, ஓங்கிய ஆர...

"கம்பராமாயணம்- வாலி வதைப் படலம் "

வாலியுடன் போர் - திட்டமிடல் தமாலம், ஏலம் செழித்திருக்கும் காட்டின் வழியே இராமன், இலக்குவன், சுக்கிரீவன், அனுமான், குரங்குப் படை அனைவரும் சென்றனர் 1 சந்தனம், சண்பகம் மிக்க சோலை வழியில் சென்றனர் 2 வண்டுகள் இசை பாடின  மேகங்கள் மேனியில் மேய்ந்தன 3 மான் ஆளி வேங்கைகள் அங்குமிங்கும் ஓடின 4 யானைகள் சினந்து போரிட, தேன் சிதைந்து ஒழுகி வழுக்கிற்று 5 வெயிலைத் தணிக்கப் புனல் ஓடிற்று 6 வாவிகளில் வனருவி பாயும்  ஏனலில் குருவி பாயும்  எங்கும் மந்தி பாயும் 7 எங்கும் ஏலம் மணந்தது 8 10 யோசனை தொலைவு கடந்து வாலி இருக்கும் மலைச்சாரல் வந்தடைந்தனர்  என்ன செய்யலாம் என்று எண்ணினர் 9 வாலியை அழைத்துப் போரிடு  அப்போது வாலிமீது நான் அம்பு எய்வேன் என்றான் இராமன் 10 பாடல் வெங் கண் ஆளிஏறும், மீளி மாவும், வேக நாகமும், சிங்க ஏறு இரண்டொடும் திரண்ட அன்ன செய்கையார், தங்கு சாலம், மூலம் ஆர் தமாலம், ஏலம், மாலைபோல் பொங்கு நாகமும், துவன்று, சாரலூடு போயினார். 1 உழை உலாம் நெடுங் கண் மாதர் ஊசல்; ஊசல் அல்லவேல், தழை உலாவு சந்து அலர்ந்த சாரல்; சாரல் அல்லவேல், மழை உலாவு முன்றில்; அல்ல, மன்றல் நாறு சண்பகக் குழை உ...